உச்சக்கட்ட பதற்றம்.. ஒருவர் பலி, பலர் படுகாயம்! இலங்கையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு
கொழும்பு: இலங்கை நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், திடீரென அது வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான இலங்கையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு, அந்நாட்டு அரசு எடுத்த தவறான முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் அரசியல் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து.
கடந்த சில மாதங்களாகவே இலங்கை நாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக நிலவி வந்தது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது.

இலங்கை
அதேபோல மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மின் பற்றாக்குறையும் உச்சத்தில் உள்ளது. இதனால் பல மணி நேரம் வரை கூட மின்வெட்டு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. இந்தியா ஏற்கனவே 1 பில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்து இருந்தது. அதேபோல 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கியது. இருப்பினும், இலங்கையில் இன்னும் கூட நிலைமை சீரடைவில்லை.

மக்கள் போராட்டம்
அந்நாட்டு அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள மக்கள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் பார்க்காமல் அதிபர் மாளிகை முன்பும், முக்கிய சாலைகளிலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு புறம் தொடர்ந்து மோசமடையும் பொருளாதாரம் மறுபுறம் ஓயாமல் நடைபெறும் மக்கள் போராட்டம் என்று ஒட்டுமொத்த இலங்கையிலும் குழப்பமான ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளது.

திடீர் வன்முறை
தலைநகர் கொழும்பில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ள ரம்புக்கனாவில் நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் டயர்களை எரித்து பொதுமக்கள் கொழும்பு செல்லும் சாலைகளை முடக்கினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு
இதையடுத்து நிலைமை கையை மீறிச் செல்வதைத் தடுக்கு போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இலங்கை நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பின்னர், பொதுமக்களில் ஒருவர் போலீசாரால் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்
1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர், இதுவரை சந்தித்திராத அளவுக்கு மோசமான பொருளாதார சிக்கலை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. இதையடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி பல வாரங்களாகப் போராட்டங்கள் இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தீர்ந்து போனதால் பல பகுதிகள் அப்படியே ஒட்டுமொத்தமாக ஸ்தமித்துள்ளது. நிலைமையை மேம்படுத்த அந்நாட்டின் நிதியமைச்சர் உதவி கேட்க இப்போது அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications