இன்று முதல் திங்கள்கிழமை காலை வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு.. மக்கள் வெளியே வர முடியாது
கொழும்பு: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை நாடு முழுக்க இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய, கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதில் குட்டித் தீவான இலங்கையும் தப்பவில்லை. இலங்கையில் இதுவரை 59 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 204 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் தங்களை தாங்களே, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டாலும், அதற்கு போதிய பலன் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில்தான், இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இலங்கை முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலும் அந்த நாட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இந்த இரு நாட்களுக்கும் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், கடைகளில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications