இலங்கையில் அதிபர் கோத்தபய எஸ்கேப்.. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9ம் தேதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் , புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இருந்தும், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தரப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்து பொதுமக்களும், போராட்டக்காரர்களும் குவிந்தனர். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுயிட்டனர்.
இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே, தப்பியோடியுள்ளார். நேற்று இரவே ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்த நிலையில், இன்று கப்பல் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகம் ஆகியவை மக்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளன.
இந்த சூழலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, மக்களை கட்டுப்படுத்துவது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications