அன்புமணி ராமதாஸ் நடைபயணம் செல்ல வேண்டுமென்றால்.. மோடி வீட்டுக்கு தான் போகனும் -கே.பாலகிருஷ்ணன்
கடலூர்: அன்புமணி ராமதாஸ் நடை பயணம் செல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடி வீட்டிற்கு தான் நடை பயணம் செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிலக்கரி நிறுவனம் மூன்றாம் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசுகையில்

வரும் 7 மற்றும் 8ஆம்தேதிகளில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் எடுப்பு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். நீங்கள் மோடியின் பக்கத்திலேயே தான் உள்ளீர்கள், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளீர்கள்.
நீங்கள் யாரை எதிர்த்து நடை பயணம் மேற்கொள்கிறீர்கள். கடந்த காலங்களில் மத்திய அரசில் அமைச்சராக இருந்தது உங்கள் கட்சியை சேர்ந்தவர்களே. குறிப்பாக நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தது உங்கள் கட்சியை சேர்ந்த சண்முகம் அப்போதெல்லாம் ஏன் நெய்வேலி மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை.
ஏன் நாடகத்திற்காக நடை பயணம் மேற்கொள்கிறீர்கள் நாடகம் நடித்து இந்த மக்களை ஏமாற்றியது போதும். நீங்கள் உண்மையிலேயே நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் மோடி வீட்டிற்கு தான் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.












Click it and Unblock the Notifications