உயர் ஜாதி வகுப்பு ஏழைகளுக்கு கல்வி-வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு: வழக்கு கடந்து வந்த பாதை!
டெல்லி: உயர் ஜாதி வகுப்பு ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக காணலாம்.
கடந்த 2019- ஆம் ஆண்டு உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

செல்லும் என தீர்ப்பு
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், உயர் ஜாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும் செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்ததனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்.

மக்களவை ஒப்புதல்
* ஜன. 8, 2019- அரசியல் அமைப்பில் 103 வது திருத்த மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
* ஜன. 9, 2019 - மாநிலங்களவையிலும் 103வது அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேறியது.
பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ஒப்புதல்
* ஜனவரி 12, 2019: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதவிற்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த மசோதா சட்டமானது.
* பிப்ரவரி மாத துவக்கத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்கால தடை
* அடுத்த சில தினங்களில் அதாவது பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி, திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்தது.
* பிப்ரவரி 8 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

5 நீதிபதிகள் அமர்வு
* அதன்பிறகு நடப்பு ஆண்டு (2022) ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் அமைக்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் யுயு லலித், தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா, ரவீந்திர பட் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
* செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கில் விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடங்கியது
* செப்டம்பர் 27 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்தையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவது உறுதி
* நவம்பர் 7 ஆம் தேதி (இன்று) வழக்கில் அரசியல் அமைப்பில் 103-வது திருத்தத்தில் கொண்டு வந்த திருத்தம் செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் அட்மிஷன்கள் போன்றவற்றில் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications