விவசாயிகளின் பாரத் பந்த்- புதுவை உட்பட 11 மாநில அரசுகள் முழு ஆதரவு- தமிழகத்திலும் கடைகள் அடைப்பு!
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 13-வது நாளக கொட்டும் பனியிலும் தொடருகிறது. மேலும் போராடும் விவசாயிகள் அழைப்பை ஏற்று நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த்-க்கு புதுச்சேரி உட்பட 11 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுவையில் அரசு,தனியார் பேருந்துகள் இயங்கவில்லை; அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடையும்; விவசாயிகளின் வாழ்வாதாரம் நாசமாகும் என்பது விவசாயிகளின் குரல். ஆகையால் மத்திய அரசு இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து நாடு தழுவிய அளவில் இன்று பாரத் பந்த் - முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகளின் போராட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன.

இன்று முழு அடைப்பை முன்னிட்டு புதுவையில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், வேன்களும் இயக்கப்படவில்லை. புதுவை மீன்மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 2,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. ஈரோட்டில் காய்கறி சந்தையும் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தமிழக எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டமும் நடத்த உள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் எந்த வன்முறையும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications