இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்தது... ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை குறைகிறது!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டம் காட்டி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
நாட்டில் ஒரு கட்டத்தில் 4,00,000-க்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு இப்போது 50,000-க்குள் அடங்கி விட்டது. கொரோனா தடுப்பூசி, பல்வேறு மாநிலங்களில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

46,617 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. . இந்தியாவில் வைரஸின் மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 59,384 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 2,95,48,302 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள் குறைவு
கொரோனா வைரஸ் காரணமாக 853 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்து சென்று விட்டது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,00,312 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு 5,09,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்களில் உள்ளவர்கள் 1.67% ஆகும்.

குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு
அதே வேளையில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.01% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர பாஸிடிவ் கேஸ்கள் விகிதம் 2.57% ஆக உள்ளது .தினசரி பாஸிட்டிவ் விகிதம் 2.48% ஆக இருக்கிறது. இதிலும் தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக 5% க்கும் குறைவாகவே பாஸிட்டிவ் விகிதம் உள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கேரளாவில் அதிக பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 34,00,76,232 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் தீவிரமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஏறக்குறைய கொரோனா குறைந்து விட்டாலும், கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications