ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுடன் சேர்த்து 50 லோக்சபா, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்!
டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் மகாரஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல்களுடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் 50 லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நான்தெட் ஆகிய இரண்டும் லோக்சபா தொகுதிகள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களுடன் மொத்தம் 50 லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நான் தெட் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அதேபோல 47 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, கர்நாடகாவில் 3 சட்டசபை தொகுதிகளும் அடங்கும்.
கர்நாடகாவின் சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான முன்னாள் முதல்வர் குமாரசாமி லோக்சபா த்ஏர்தலில் வென்று மத்திய அமைச்சராகிவிட்டார். இதனால் சென்னபட்டணா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறும்.












Click it and Unblock the Notifications