மாறி மாறி.. 41 வருடத்தில் இத்தனை முறையா! உச்ச நீதிமன்றத்தையே வியக்க வைத்த கணவன் - மனைவி! பரபர வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கணவன் மனைவி தொடுத்த வழக்கு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற இவர்கள் உச்ச நீதிமன்றத்தையே வியப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.. அப்படி என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்!

உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகள் நீதிபதிகளையே வியப்பிற்கு உள்ளாக்கும் விசித்திரமான வழக்குகள்.

அந்த வகையில்தான் 11 வருடத்திற்கு முன் பிரிந்த கணவன் - மனைவிக்கு இடையிலான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

பல வழக்குகள்

பல வழக்குகள்

அந்த வழக்கின் மனுதாரர்கள் விவரம் வெளியாகவில்லை. டெல்லியில் வசிக்கும் அவர்கள் இருவரும் 43 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் 11 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் ஜீவனாம்சமாக மனைவிக்கு கணவர் வீட்டின் ஒரு தளத்தை கொடுக்க வேண்டும், நிதி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதே போல் கணவரும் வீட்டின் ஒரு தளத்தை வழங்கி இருக்கிறார்.

மாமனார் மீது புகார்

மாமனார் மீது புகார்

இந்த நிலையில்தான் பிரிந்து போன கணவன் மனைவிக்கு இடையில் பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. வருமானம் கொடுப்பது, குழந்தையை படிக்க வைப்பது என்று பல விஷயங்களில் மோதல் வந்துள்ளது. இந்த மோதல் அனைத்திலும் இருவரும் பேசி தீர்க்காமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கீழமை நீதிமன்றம், ஹைகோர்ட் என்று மொத்தம் 43 வருடங்களில் 60 வழக்குகளை போட்டுள்ளனர்.

வீடு

வீடு

இது போக மாமனார் மீது அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கும் போட்டு இருக்கிறார். இந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் கணவர் தரப்பு மனுதாரர் மொத்தம் 60 வழக்குகள் இரண்டு தரப்பில் இருந்தும் மாறி மாறி போடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். இதை கேட்ட தலைமை நீதிபதி வியப்பில் ஆழ்ந்தார். சில தம்பதிகள் இப்படித்தான்.. சண்டை போட விரும்புவார்கள்.

சமாதானம்

சமாதானம்

என்ன விஷயமாக இருந்தாலும் அதை சண்டையில் முடிக்க விரும்புவார்கள். அவர்களால் கோர்ட்டுக்கு செல்ல முடியவில்லை என்றால் தூக்கம் வராது என்று கூறினார். இதையடுத்து இரண்டு பேரிடமும் நீங்கள் சமரசம் செய்ய விரும்புகிறீர்களா.. டெல்லி ஹைகோர்ட் மீடியேஷன் அமர்வு மூலம் அனைத்து வழக்கிலும் சமரசம் பேசலாம் என்று அறிவுரை வழங்கினார். இதை அந்த ஆண், பெண் இருவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர்களின் மனு சமரசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சமரச பேச்சுவார்த்தை நடக்கும் போது புதிதாக வழக்கு எதுவும் போட கூடாது என்று அந்த தம்பதிக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+