லட்சத்தீவு அருகே வந்த போர்க்கப்பல்.. இந்தியா கடும் எதிர்ப்பு! இறங்கி வந்து பவ்யம் காட்டும் அமெரிக்கா
டெல்லி: இந்திய அரசின் அனுமதி இல்லாமல் அமெரிக்க போர்க் கப்பல் லட்சத்தீவு அருகே நுழைந்த நிலையில், இதை அமெரிக்க கடற்படை வெளிப்படையாகவே தெரிவித்து அதிர்ச்சியளித்தது. ஆனால் தற்போது அமெரிக்கா இந்த விவகாரத்தில் பவ்யம் காட்ட ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க கடற்படை 7வது ப்ளீட் தளபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், ஏப்ரல் 7 ம் தேதி, யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் போர்க் கப்பல் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு [EEZ] உள்ளே, லட்சத்தீவு தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில் ரோந்து சென்றது உறுதி செய்யப்பட்டிருந்தது.

வெளிப்படையாக சொன்ன அமெரிக்கா
அமெரிக்க உரிமைகள், சுதந்திரம், சர்வதேச சட்டங்களின்படி வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகியவற்றை இதன் மூலம் உறுதி செய்துள்ளோம். இந்தியா தங்களது எல்லையை தாண்டி "கூடுதலாக கடல்சார் உரிமையை கோருவதை எதிர்க்கும்" வகையில் இந்த ரோந்து அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது அந்த செய்திக்குறிப்பு.

மலபார் பயிற்சி
சமீபத்தில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மலபார் பயிற்சி என்ற பெயரில் வங்க கடலில் கப்பற்படை பயிற்சி மேற்கொண்டனர். சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பாக இது பார்க்கப்பட்டது. சீனா இந்த பிராந்தியத்தில் கடல்சார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் இந்தியா நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே ஓரணியில் திரண்டு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, அமெரிக்கா, இந்தியாவின் கடல் பரப்புக்குள் ஊடுருவியது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்திய நட்பு
இந்த நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் பவ்யம் காட்டியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் இப்போது வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க 7வது ப்ளீட்டைச் சேர்ந்த ஜான் பால் ஜோன்ஸ் இந்திய கடல்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. அமெரிக்கா எப்போதுமே சர்வதேச சட்டங்கள் மற்றும் கடல்சார்ந்த சுதந்திரத்தை மதித்து வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த ரோந்தும் நடைபெற்றது. இந்தியாவுடனான பார்ட்னர்ஷிப்பை அமெரிக்கா மதிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியின் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் நட்புறவை அமெரிக்கா பேணுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறங்கி வந்த அமெரிக்கா
முன்னதாக இந்திய தரப்பு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. சர்வதேச சட்டங்கள்படி, பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு, தொடர்புள்ள நாட்டின் அனுமதி பெறாமல் இப்படி ராணுவ ரோந்து செய்யக் கூடாது என இந்திய தரப்பு கூறியிருந்தது. எனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ராணுவ தலைமையகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் அமெரிக்கா மாலத்தீவு கடல்பகுதியில் கப்பலை செலுத்தியது. ராணுவ பயிற்சி செய்யவில்லை என கூறியிருந்தது. இந்த நிலையில் இப்போது அமெரிக்கா மேலும் ஒருபடி அதிகமாக நட்புக்கரத்தை நீட்டியுள்ளது.
-
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு












Click it and Unblock the Notifications