விவசாயிகளுடனான மத்திய அரசின் 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! போராட்டம் தொடர்கிறது
டெல்லி: விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், வரும் 8ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடும் குளிர், கொட்டும் மழைக்கு மத்தியில், மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி 40ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் விவசாயிகள்.

விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் இல்லாத நிலையில், மத்திய அரசு திங்கள்கிழமை நடத்திய ஏழாம் சுற்றுபேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஆனால் விவசாயிகள் அந்த கோரிக்கையில்ல உறுதியாக உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தகம் மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரான வர்த்தகத் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications