சீனா, பாகிஸ்தான் ஜோடியா எதிர்த்தாலும்... அதை முறியடிக்க நமது ராணுவம் ரெடி... எம்.எம்.நாரவனே உறுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வந்தாலும் நாம் அதனை திறம்பட கையாள்வோம் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் நமது படைகள் தேசிய நலன் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடை பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

Army Chief says Pakistan, China form potent threat, ready to meet any eventuality

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து நமது தேசிய பாதுகாப்புக்கு ஒரு சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன, இந்த கூட்டு அச்சுறுத்தலை விரும்ப முடியாது. ஒரே நேரத்தில் இருமுனை அச்சுறுத்தல் சூழ்நிலையை சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு நாம் இதுபோன்ற சவால்களில்(லடாக் விவகாரம்) பேச்சுவார்த்தையை கடைப்பிடித்து சவால்களைச் சமாளிக்கும் சந்தர்ப்பத்திற்கு உயர வேண்டியிருந்தது. தேசம் எதிர்கொள்ளும் எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க நாம் முழுமையாக தயாராக இருக்கிறோம். கிழக்கு லடாக்கில் நமது படைகள் தேசிய நலன் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடை பிடிக்கும் என்று எம்.எம்.நாரவனே கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+