எந்த திருத்தத்தையும் செய்ய தயார்.. போராட்டத்தால ஒன்னும் நடக்காது... வேளாண் அமைச்சர் திட்டவட்டம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், சட்டங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 100ஆவது நாளை கடந்தும் தொடர்கிறது. டிசம்பர் மாதம் கடும் குளிரில் தொடங்கிய போராட்டம் தற்போது மூன்று மாதங்களைக் கடந்துள்ளது.
விவசாயிகள் எதற்கும் தயாராக உள்ளதாகவும் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்றும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் சமீபத்தில் கூறியிருந்தார்.

தயார்
இந்நிலையில், ஐந்தாவது தேசிய அக்ரிவிஷன் மாநாட்டின் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "போராடும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இந்த சட்டங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராகவே உள்ளது. இதற்காக இச்சட்டங்களில் குறைகள் உள்ளது என்று அர்த்தமில்லை" என்றார்.

பயன் தராது
மத்திய அரசின் மூன்று சட்டங்கள் சந்தையில் விவசாய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்ய உதவும் என்றும் இவை விவசாய துறையில் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். தலைநகரில் நடைபெறும் இந்தப் போராட்டம் விவசாயிகளின் நலனை எந்த விதத்தில் பாதுகாக்கும் என்பதைப் பற்றிப் பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளையும் அவர் சாடினார்.

உடன்பாடு இல்லை
மத்திய அரசு கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாய சட்டங்களை நிறைவேற்றியது. அப்போது முதலே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும்கூட விவசாய சட்டங்களை 18 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக வழக்கில், விவசாய சட்டங்களை அமல்படுத்தத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்யக் குழு ஒன்றையும் அமைத்தது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications