பாரத் பந்த்: பல மாநிலங்களில் ரயில் மறியல்- லக்னோவில் 144 தடை உத்தரவு- போராட்டங்களுக்கு தடை
டெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் பாரத் பந்த்-ன் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 13-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முழு அடைப்பு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தினர்.

மாநிலங்களில் ரயில் மறியல்
இதனால் பல பகுதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை எரித்து வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
தெலுங்கானாவில் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். டெல்லியில் மாநில எல்லை பகுதிகளில் போலீசார் உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் போபாலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலங்கள் தோறும் போராட்டம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மாணவர் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் பிரக்யாராஜ் அருகே சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். ஆந்திராவின் விஜயவாடாவிலும் இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications