கோவாக்சின் தடுப்பூசி.. 77.8% பயன்.. பாரத் பயோடெக் வெளியிட்ட 3ம் கட்ட சோதனை முடிவுகள்
டெல்லி : பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட 3 ஆம் கட்ட சோதனைகளில் கோவாக்சின் 77.8% செயல்திறனைக் காட்டியுள்ளதாக பாரத் பயோடெக் வட்டாரங்கள் அரசின் அமைப்புகளிடம் தெரிவித்துள்ளன.
அரசின் பொருள் நிபுணர் குழு (எஸ்.இ.சி) பாரத் பயோடெக்கின் தரவினை மதிப்பாய்வு செய்வதற்காக இன்று மதியம் கூடியது. அப்போது எஸ்.இ.சி குழுவிற்கு பாரத் பயோடெக் கோவேக்சின் குறித்து விவரங்கள் வழங்கப்பட்டன.அந்த தரவுகளின் படி கோவாக்சினின் 77.8% செயல்திறனைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் எஸ்.இ.சி குழு ஆய்வு செய்த பின்னர் கோவேக்சின் குறித்த தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) பரிசீலனைக்கு அனுப்பும்.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) கோவாக்சின் எப்படி செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பும் பாரத் பயோடெக்கின் ஆர்வத்தை ஏற்றுக்கொண்டது,. பாரத் பயோடெக் நாளை (ஜூன் 23 ஆய்வை) சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. WHO அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு கோவாக்சின் ஒரு படி மேலே செல்ல இது உதவும் என்று பாரத் பயோடெக் எதிர்பார்க்கிறது.
இந்த கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி பற்றிய விரிவான மறுஆய்வு செய்யப்படாது என்றாலும், மருந்தின் ஒட்டுமொத்த தரம் குறித்த சுருக்கத்தை சமர்ப்பிக்க இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நம்புகிறது.
பாரத் பயோடெக் கடந்த மாதம் ஜூலை-செப்டம்பர் மாத வாக்கில் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்காக உலக சுகாதார மையத்தி ஒப்புதலுக்காக கோவாக்சினை அனுப்பியது. ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications