குட் நியூஸ்..பிரிட்டன்& இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுக்கு..எதிராக வேலைசெய்யும் கோவாக்சின்
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரசின் 2ஆம் அலையால் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இருப்பினும், இந்தத் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா பரவுவதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை. இதனால் உருமாறிய கொரோனாவை இந்தத் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா என மக்களிடையே சந்தேகம் எழுந்தது.

உருமாறிய கொரோனா வகைகள்
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்
இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக போதியளவு செயல்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா ட்வீட் செய்துள்ளார்.

நம்பகத்தன்மை
இந்த ஆய்வு முடிவுகள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அப்போது கோவாக்சின் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுக்கு வரவில்லை. இதனால், கோவாக்சின் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி தட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும்கூட தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பாரத் பயேடெக், சீரம் தவிர நாட்டிலுள்ள மற்ற நிறுவனங்களிலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications