குட் நியூஸ்..பிரிட்டன்& இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுக்கு..எதிராக வேலைசெய்யும் கோவாக்சின்
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரசின் 2ஆம் அலையால் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இருப்பினும், இந்தத் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா பரவுவதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை. இதனால் உருமாறிய கொரோனாவை இந்தத் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா என மக்களிடையே சந்தேகம் எழுந்தது.

உருமாறிய கொரோனா வகைகள்
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்
இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக போதியளவு செயல்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா ட்வீட் செய்துள்ளார்.

நம்பகத்தன்மை
இந்த ஆய்வு முடிவுகள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அப்போது கோவாக்சின் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுக்கு வரவில்லை. இதனால், கோவாக்சின் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி தட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும்கூட தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பாரத் பயேடெக், சீரம் தவிர நாட்டிலுள்ள மற்ற நிறுவனங்களிலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications