3 நாட்களும் கண்டிப்பாக வர வேண்டும்.. பாஜக எம்பிகளுக்கு விப் நோட்டீஸ்.. என்ன காரணம்?
பாஜக கொறடா சார்பாக அக்கட்சி எம்பிகளுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: பாஜக கொறடா சார்பாக அக்கட்சி எம்பிகளுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 35000 ராணுவ வீரர்கள் புதிதாக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

காஷ்மீர் விஷயத்தில் மத்திய பாஜக அரசு முக்கியமான நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முக்கியமாக காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டு சட்டங்களை மத்திய அரசு நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
அதே சமயம் இன்னொரு பக்கம் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கட்சி சார்பாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான மசோதாக்கள் பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது. முத்தலாக் மசோதா, என்ஐஏ மசோதா, தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா எல்லாம் பெரிய சர்ச்சையானது.
இப்படி அடுத்தடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருவதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கு இடையில் தற்போது பாஜக கொறடா பாஜக எம்பிக்கள் எல்லோருக்கும் விப் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக லோக்சபா மாற்று ராஜ்ய சபாவிற்கு வர வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என்று கொறடா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு முக்கியமான சட்டம் எதையாவது நிறைவேற்ற வாய்ப்புள்ளது, அல்லது அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டு சட்டங்களை நீக்க வாய்ப்புள்ளது என்பதால், இந்த விப் நோட்டீஸ் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications