டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு : மகாராஷ்டிரா, கேரளா, ம.பி.-க்கு மத்திய சுகாதாரத்துறை 'அலர்ட்'
டெல்லி: இந்தியாவில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதியதாக டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடங்கி இருக்கிறது.
கொரோனா 2-வது அலை பாதிப்புக்கு மிக முக்கியமானதாக இருந்தது டெல்டா வகை கொரோனா வைரஸ்கள்தான்.

மத்திய அரசு அறிவுறுத்தல்
தற்போது டெல்டா பிளஸ் கொரோனா, இந்தியாவில் 3-வது அலையை தொடங்கி வைக்கக் கூடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கெல்லாம் பாதிப்பு?
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் கொவிட்-19-ன் டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளது.

எப்படியான பாதிப்பு ஏற்படும்?
அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் தன்மையை இந்த கொரோனா வைரஸ் வகை கொண்டுள்ளது. ஆகையால் பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இந்த மாநிலங்கள் கூடுதல் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் போதுமான அளவு மாதிரிகளை அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications