விஷம பிரச்சாரம்: 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன?
டெல்லி: இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த 35 யூடியூப் சேனல்கள் மற்றும் இரு இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த டிஜிட்டல் மீடியா தளங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் விமான விபத்தில் காலமானது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பி வந்தன.
இந்த நிலையில்தான் 35 யூடியூப் சேனல்கள் இந்தியா தொடர்பான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் பொய்யான செய்தியை பரப்பியதால் முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

என்னென்ன சானல்கள்
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், பாகிஸ்தானால் இயக்கப்படும் 35 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முடக்குகிறது. அதில் அப்னி துனியா நெட்வொக்கின் 14 யூடியூப் சேனல்களும் தல்ஹா பிலிம்ஸ் நெட்வொர்க்கின் 13 யூடியூப் சேனல்களும் அடங்கும்.

சேனல்கள்
இவர்கள் பரப்பிய அத்தனை வீடியோக்களும் இந்தியா குறித்து உணர்வுப்பூர்வமான விஷயங்களாகும். இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் விவகாரம், மற்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் நல்லுறவு உள்ளிட்டவைகள் குறித்தும் இந்த சேனல்கள் அவதூறு பரப்பியிருந்தன.

2 இன்ஸ்டாகிராம் கணக்குகள்
அத்துடன் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருந்தன. மேலும் இவர்களது வீடியோக்கள் இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்பதால் பாகிஸ்தானை சேர்ந்த 35 யூடியூப் சேனல்கள், 2 இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றுடன் 2 இணையதளத்தையும் முடக்கியுள்ளோம்.

20 சேனல்கள் முடக்கம்
இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவலை பரப்பிய சேனல்களுக்கு மொத்தம் 1.20 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது வீடியோக்களை 130 கோடி பேர் பார்த்துள்ளனர் என அந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி பாகிஸ்தானின் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரு இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications