விட்டுக் கிழிக்கும் எதிர்க்கட்சிகள்.. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு யோசனை
டெல்லி: ஐந்து மாநில தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
'பெட் கட்டி சொல்றேன்.. இன்னைக்கும் பெட்ரோல் விலை உயரும்' என்றான் நண்பன்.. அவ்ளோ கான்ஃபிடன்ட் அவனுக்கு. அந்த அளவுக்கு இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நொந்து போயுள்ளனர் சாமானிய மக்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன், ஜுலை மாதங்களில் இருந்து விலை கடுமையாக உயரத் தொடங்கியது.
சென்னையில் இன்று (மார்ச்.10) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.86.45 என்று விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம், மேற்குவங்கம் உட்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசாங்கம் எரிபொருள் விலையை கட்டுப்படுத்தலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆலோசனைகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், எதிர்க்கட்சிகள் தங்களது பிரச்சாரங்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை தான் முக்கிய ஆயுதமாக கையில் எடுக்கின்றனர். மக்களும் அதிருப்தியில் உள்ளதால், எதிர்க்கட்சிகளின் வியூகம் எடுபட்டுவிடுமோ என்று மத்திய அரசு யோசிக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு முக்கியமான வருவாய் ஆதாரமாகும். கோவிட் -19 காரணமாக லாக் டவுனில் இருந்ததால், அரசுகளுக்கு வருவாய் ஈட்டுவது என்பது பெரும் சிக்கலாக உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எரிபொருள் மீதான வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் ஆண்டுக்கு ரூ .5.5 லட்சம் கோடியாக உள்ளது. எரிபொருள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டால், மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ரூ .2.5 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications