இது 4-வது முறை.. மசூத் அசாரை எப்போதெல்லாம் சீனா காப்பாற்றியுள்ளது தெரியுமா?
Recommended Video

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் வாயிலாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர், மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த நிலையில்தான், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நாடு கொண்டு வந்து இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 10 நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன.
இந்த தீர்மானத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும், சீனா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்தியாவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
2009ம் ஆண்டு, ஐநா சபையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. அதற்கு சீனா ஆதரவு கிடைக்கவில்லை. 2016ல் பதன்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, மீண்டும் ஐநா சபை உதவியை நாடியது இந்தியா. இம்முறை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய பி3 நாடுகள் உதவியுடன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போதும் சீனா முதுகில் குத்தியது.
2017ம் ஆண்டு பி3 நாடுகள், இதேபோன்ற தீர்மானத்தை முன்மொழிந்தன. அப்போதும், வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, அதை பயன்படுத்தி இந்திய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதே இப்போது காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் அரசு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்த தீர்மானத்திற்கும் சீனா ஆதரவு அளிக்கவில்லை. ஆக மொத்தம், 4 முறை தனது அதிகார பலத்தால் இந்தியாவின் முதுகில் குத்தி, தனது பாகிஸ்தான் தோழனுக்கு பல்வரிசை காட்டி சிரிக்கிறது சீனா.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications