வெளிப்படை தன்மையே இல்லை..தெளிவற்ற பிரதமர் மோடி அமைச்சரவை.. மீண்டும் சீண்டிய சு.சாமி.. ஏன் தெரியுமா?
டெல்லி: வெளிப்படை தன்மையின்றி தெளிவற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை உள்ளது. அதனை முதலில் மத்திய நிதி அமைச்சர் கிரண் ரிஜிஜூ சரிசெய்ய வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய நீதித்துறையில் கொலிஜியம் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்சநீதிமன்றத்தின் குழுதான் கொலிஜியம் என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலிஜியத்தின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இருப்பார். மூத்த நீதிபதிகளும் இடம்பெற்றிருப்பார்கள். இந்த குழு சார்பில் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைகள் வழங்கப்படும்.

கொலிஜியம் முறை என்ன?
அதாவது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக யாரை நியமனம் செய்வது?, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றுக்கான பரிந்துரைகளை வழங்கும். இந்த பரிந்துரைகளின் மத்திய சட்டத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும். ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

சட்ட அமைச்சர் எதிர்ப்பு
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் முறைக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜூ பேசினார். அப்போது அவர் கொலிஜியம் முறையை விரும்பவில்லை எனக்கூறி விமர்சனம் செய்தார்.

கிரண் ரிஜிஜூ கூறியது என்ன?
இதுதொடர்பாக கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‛‛உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் முறையில் எனக்கு திருப்தி இல்லை. சிஸ்டம் சரியில்லை. பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் நினைப்பதை பற்றி தான் நான் பேசுகிறேன். தகுதியானவர்கள் தான் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய கொலிஜியம் முறையில் நீதிபதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை பரிந்துரை செய்கின்றனர். இது தவறானது'' என்பன உள்பட பல்வேறு கருத்துகளை கூறினார்.

கலவை கருத்து
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் இந்த பேச்சு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. ஒரு தரப்பு அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். கொலிஜியம் முறையால் சில தகுதியானவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது மாற்றப்பட வேண்டும் என சிலர் கருத்துகள் கூறி மத்திய அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. நீதித்துறையிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம். இதற்கான முன்னோட்டமாக தான் கொலிஜியம் முறையை சட்டத்துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.

சுப்பிரமணியசுவாமி விமர்சனம்
இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் வெளிப்படைத்தன்மையின்றி உள்ளதுஎன்கிறார். முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையிலும், நீதிமன்றங்களில் 100க்கும் அதிகமான வழக்குகளில் வாதிட்டவர் என்ற முறையிலும் நான் ஒன்றை கூறுகிறேன். மோடி அமைச்சரவை வெளிப்படை தன்மையின்றி மிகவும் தெளிவற்ற நிலையில் உள்ளது என்பதை என்னால் கூற முடியும். இதனை கிரண் ரிஜிஜூ முதலில் சரிசெய்ய வேண்டும். இதனை நீங்கள் செய்யும்போது பதவி நீக்கம் செய்யப்பட்டால் என்னை குறைக்கூறக்கூடாது'' என தெரிவித்துள்ளார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications