பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் அதிகம்.. தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசிகள்.. மத்திய அரசு பாரபட்சம்!
டெல்லி: மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியா முழுவதும் தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனா தினம், தினம் உட்ச பாதிப்புகளை கொண்டு வருகிறது.
தினமும் 3,50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் எனும் ஆயுதம்
கொரோனவை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவொக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசியை விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாகுபாடு காட்டுகிறது
மே 11-ம் தேதி நிலவரப்படி, 7.9 கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு 1.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதே அளவு மக்கள் தொகையுடன், ராஜஸ்தானை விட தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தமிழகத்துக்கு ராஜஸ்தானை விட 76 லட்சம் அளவுகளுக்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகையும், குறைவான பாதிப்பும் கொண்ட குஜராத்துக்கு 1.5 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

தமிழக அரசு புகார்
இது தொடர்பாக புகார் தெரிவித்த தமிழகம் இதே போல் மருத்துவ ஆக்சிஜனும் தமிழகத்துக்கு குறைவாக ஒதுக்கப்படுகிறது என்று கடந்த வாரம் குற்றம்சாட்டியது. 470 மெட்ரிக் டன் தேவை என்று கேட்கப்பட்ட நிலையில் 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மட்டுமே ஒதுக்கியுள்ளதாக தமிழகம் கடந்த வாரம் புகார் கூறியது, அதே நேரத்தில் சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுப்பியதாகவும் தமிழக அரசு ஏற்கனவே குற்றம்சாட்டியது.

ஒற்றுமை இல்லை
ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக மத்திய குழுவினர் கூறுகையில், ' கேரளாவின் எல்லை மாவட்டமான பாலக்காட்டில் உள்ள ஐனாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் இருந்து தமிழகம் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெற்றது. கடந்த மே 10 அன்று கேரள முதல்வர் மாநிலத்திலிருந்து ஆக்ஸிஜனை வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். இதேபோல் பல மாநிலங்கள் ஒற்றுமை இல்லாமல் செயல்படுவதாக அவர்கள் கூறினார்கள்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications