பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு... மக்களவையில் கடும் கூச்சல், குழப்பம்... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: நாடளுமன்ற மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வேளாண் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி அர்த்தமுள்ள எதையும் கூறத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் எம்பி ஆதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

பிரதமர் பேச்சு
நாடளுமன்ற மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-வேளாண் சட்டங்கள் அமைக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் இப்போது தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து விவசாயிகள் எதையும் இழக்கவில்லை. பண்ணை சட்டங்கள் அமைக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்களில் உள்ள காரணத்தை மூழ்கடித்து உண்மையை மறைக்க ஒரு சிலர் திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர் என்று கூறினார்.

கோஷங்கள் எழுப்பினார்கள்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். அப்போது அவையில் இருந்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கூச்சல் எழுப்பினர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் குறிதது பிரதமர் கூறிய அந்தோலன் ஜீவி வார்த்தையை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

வெளிநடப்பு செய்தனர்
பிரதமர் மோடியின் பேச்சுக்கு இடையூறு செய்யும் விதமாக அவர்கள் இவ்வாறு கூச்சலிட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை அமைதி காக்குமப்டி கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தார். ஆனாலும் தனது பேச்சை தொடர்ந்த பிரதமர் மோடி காங்கிரசை தாக்கினார். இதன் யடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மோடி அர்த்தமுள்ளதை கூறவில்லை
பின்னர் வெளியே வந்து காங்கிரஸ் எம்பி ஆதீர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:- வேளாண் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி சில உறுதியான நடவடிக்கைகளுடன் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அர்த்தமுள்ள எதையும் கூறத் தயாராக இல்லை. விவசாயிகளின் மரணம் குறித்த எங்கள் கவலைகளை பிரதமர் விவாதிக்கவில்லை . அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். வேளாண் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். அனைவருக்கும் பயனளிக்காத சட்டங்களை ஏன் அரசு கொண்டு வர வேண்டும்? என்று கூறினார் .
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications