Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி தலைமையிலான பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் 9.50 லட்சம் பேர் தற்கொலை: காங். பொளேர் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 9.50 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; 7 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை 139% அதிகரித்துள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீர்ப் சுர்ஜிவாலா சாடியுள்ளார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை முன்வைத்து ரந்தீப் சுர்ஜிவாலா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2014-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டோர் மொத்த எண்ணிக்கை 9,58,275. நாட்டில் மாணவர்களின் தற்கொலை விகிதம் 55% அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலைகள்

விவசாயிகள் தற்கொலைகள்

வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களின் தற்கொலை விகிதம் 58% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வரிசையில் நாட்டில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களானது 139.37% அதிகமாக பதிவாகி இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசினால் இதுவரை 78,303 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். இதில் 35,122 பேர் விவசாய கூலிகள்.

தற்கொலைகள் அதிகரிப்பு

தற்கொலைகள் அதிகரிப்பு

2019 மற்றும் 2020 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவசாயிகளின் தற்கொலை 19% அதிகரித்துள்ளது. மோடியின் ஆட்சியில் 69,407 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2014-2020-ம் ஆண்டில் 1,52,127 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவருக்குமே அவர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்த ஒன்றாகத்தான் தெரிகிறது.

வேலைவாய்ப்பும் வருமான அதிகரிப்பும்

வேலைவாய்ப்பும் வருமான அதிகரிப்பும்

ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி 12 லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். ஆனால் நாட்டின் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்கள், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம், விவசாயத்துக்கான செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவைதான் விவசாயிகளின் தற்கொலை முடிவுகளுக்கு காரணம்.

தற்கொலைக்கான காரணம் என்ன?

தற்கொலைக்கான காரணம் என்ன?

ஆனால் இந்த தற்கொலைகளை மூடி மறைக்கும் பல நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டும் வருகிறது. மத்திய பாஜக அரசானது மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பதால் தற்கொலை முடிவை எடுக்க நேரிடுகிறது. விவசாயத்தில் உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, ஆதரவு விலைக் குறைவு, பயிர்க் காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் அதிகமாகப் பலன் பெறுதல், இறுதியாக கறுப்பு வேளாண் சட்டங்கள் போன்றவற்றால், விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+