ஆந்திராவில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு.. ஷாக் லிஸ்ட்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 12மணி நிலவரப்படி 1417 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 785777 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37815 பேர் உயிரிழந்துள்ளனர் 165607 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிகபட்மாக அமெரிக்காவில் சுமார் 1.50 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் மிக அதிகபட்சமாக இதுவரை சுமார் 11500 பேர் இறந்துள்ளார்கள்.

47 பேர் பலி
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை மட்டும் 70 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1417 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் புதிதாக இறந்த 6 பேர், கேரளாவில் ஒருவர் உள்பட மொத்தம் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளனர்.

248 பேர் பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1166 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 138 பேர் இதுவரை பூரண குணம் அடைந்துள்ளனர். நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். 39 பேர் குணம் அடைந்துள்ளனர்.

234 பேர் பாதிப்பு
2வது இடத்தில் கேரளா உள்ளது. இங்கு கொரோனாவால் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். 20 பேர் குணமடைந்துள்ளனர். 213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 97 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் இறந்துள்ளனர். 6 பேர் குணம் அடைந்துள்ளனர்.

உபியில் 101 பேர்
உத்தரப்பிரதேசத்தில் 101 பேரும், கர்நாடகாவில் 91 பேரும், ராஜஸ்தானில் 83 பேரும், தெலுங்கானாவில் 77 பேரும், குஜராத்தில் 73 பேரும், தமிழகத்தில் 74 பேரும், ஜம்மு காஷ்மீரில் 49 பேரும், மத்திய பிரதேசத்தில் 66 பேரும் , பஞ்சாபில் 41 பேரும், ஹரியானாவில் 36 பேரும், ஆந்திராவில் 40 பேரும், மேற்கு வங்கத்தில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஒருவர்
பீகாரில் 16 பேரும், சண்டிகரில் 13 பேரும், லடாக்கில் 13 பேரும் அந்தமானில் 10 பேரும் சட்டீஸ்கரில் 8 பேரும், உத்தரகாண்டில் 7 பேரும், கோவாவில் 5 பேரும், இமாச்சல பிரதேசத்தில் 3 பேரும், ஒடிசாவில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 10 பேரும், கேரளாவில் 2 பேரும், டெல்லியில் இரண்டு பேரும், கர்நாடகாவில் 3 பேரும், தெலுங்கானாவில் 8 பேரும், தமிழகத்தில் ஒருவரும், குஜராத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 2 பேரும், பஞ்சாப்பில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் 4 பேரும் பீகாரில் ஒருவரும், இமாச்சலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications