கொரோனாவுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க விராஃபின் மருந்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராஃபின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வெளிப்புறத்தில் இருந்து ஆக்சிஜன் வழங்கும் தேவையை விராஃபின் குறைக்கும் என்றும் மருத்துவ துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பல லட்சம் பேரை பாதித்துள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். நாடே அவசரகால நிலையை எதிர்நோக்கியுள்ளது. சுடுகாடுகளில் எரிக்கவும், புதைக்கவும் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரெம்டெசிவர் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட மிதமான கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸைடஸ் நிறுவனத்தின் விராஃபின் மருந்திற்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் வழங்கியுள்ளது.
ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் விராஃபின் பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா -2 பி, மருந்துகளை மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராஃபின் மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவிகிதம் பேர் 7 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் தேவையை குறைக்கிறது.
நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராஃபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான துணை ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு பிரச்சினையை இந்த விராஃபின் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications