மனரீதியாக துன்புறுத்தல்.. காமன்வெல்த்தில் விளையாட விடக் கூடாது என சதி.. கதறும் வீராங்கனை
டெல்லி: இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தான் பங்கேற்கக்கூடாது என்கிற நோக்கத்தில் தன்னை மன ரீதியான துன்புறுத்தலுக்கு சிலர் ஆளாக்கியுள்ளதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் லவ்லினா போர்கோஹெய்ன். இவர் பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2018-ஆம் ஆண்டு நடந்த தொடக்க இந்திய ஓபனில் தங்கம் வென்றபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடினார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்த 24 வயதான லவ்லினா, தனது இரண்டு மூத்த சகோதரிகளிடமிருந்து கிடைத்த உத்வேகத்தால் குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகினார்.
இந்நிலையில் அவர் நடப்பு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து சென்றிருக்கிறார். ஆனால் அங்கு தனது பயிற்சியாளர் தன்னுடன் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "இந்த பயிற்சி முகாமில் நான் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. நான் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன். எனது பயிற்சியாளர் சந்தியா குருங்ஜி காமன்வெல்த் கிராமத்திற்கு வெளியே உள்ளார். அவர் இங்கு வர அனுமதிக்கப்படவில்லை. போட்டி நடைபெறுவதற்கு 8 நாட்களுக்கு முன்னரே எனது பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
எனது இரண்டாவது பயிற்சியாளரும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் எனது பயிற்சி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்னால் போட்டியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனக்கு எதிரான அரசியலை நான் உடைத்தெறிவேன். அதன் மீது நான் பதக்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனை ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications