இந்தியாவுக்கு 2.01 கோடி கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்த 3 மாதங்களுக்கு 2 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாக மத்திய மருந்துகள் சார் துறையின் செயலாளர் டாக்டர். பி.டி. வகேலா கூறியுள்ளார்.
மத்திய அரசின் கொரோனா தடுப்பு உயர்நிலை குழுவின் தலைவராக உள்ள மருந்துகள் சார் துறையின் செயலாளர் டாக்டர். பி.டி. வகேலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் 75,000 வென்டிலேட்டர்கள் தேவை இருக்கிறது. மத்திய அரசிடம் 19, 398 வென்டிலேட்டர்கள் கையிருப்பில் இருக்கிறது.
மேலும் 7, 884 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 1,000 மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். எஞ்சிய 6,884-ம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
பெல், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் 40,000 வென்டிலேட்டர்களை தயாரிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் என்- 95; என் - 99 முக கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 2.01 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) அடுத்த 3 மாதங்களுக்கு தேவை . இதில் 1.42 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தியாவுக்கு 35 லட்சம் பிடி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையானதாக உள்ளது. இதனால் மருத்துவ கவுன்சில் 21.35 லட்சம் பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. இதில் 13.75 கருவிகள் வந்துவிட்டன. இவ்வாறு வகேலா கூறினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications