அதெல்லாம் சரி.. இளையராஜா பாராட்டினாரே 'அம்பேத்கரும் மோடியும்' புத்தகம்.. அது யார் எழுதினது தெரியுமா?
டெல்லி: இளையராஜா முன்னுரை எழுதி மிகவும் சர்ச்சைக்குள்ளான அம்பேத்கரும் மோடியும் எனும் புத்தகத்தை எழுதியது யார் தெரியுமா? அதை வெளியிட்ட நிறுவனத்தின் சிஇஓ யார் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பேத்கர் மற்றும் மோடி என்ற புத்தகத்தை ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் என்ற நிறுவனம் அமேசானில் விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த புத்தகத்தில் அம்பேத்கர் எனும் சீர்திருத்தவாதியின் திட்டங்களை நரேந்திர மோடி எப்படி செயல்படுத்தினார் என்பது குறித்து விவரமாக கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதினார். பொதுவாக புத்தகத்தை எழுதுவோர்தான் சர்ச்சையில் சிக்கும் சூழல் எழுந்திருப்பதை பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல்முறையாக ஒரு நூலுக்கு முன்னுரை எழுதி சர்ச்சையில் சிக்கியவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.

இளையராஜா முன்னுரை
இந்த புத்தகத்திற்கு கடந்த 9ஆம் தேதி இளையராஜா முன்னுரை எழுதினார். இந்த நிலையில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இளையராஜாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிகின்றன.

டெல்லியில் இயங்கும் அமைப்பு
இந்த நிலையில் இந்த புத்தகம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் தயாரித்தது. இதன் தலைமை செயல் அதிகாரியான அகிலேஷ் மிஸ்ரா ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சமூகவலைதளங்களில் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

எக்ஸாம் வாரியர்ஸ்
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் என்ற நூலை இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த நிறுவனம் வெளியிட்டது. இதோடு அல்லாமல் பிரதமர் மோடி பொதுக் கூட்டங்களில் பேசிய முக்கிய பேச்சுகள், சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் பேசிய பேச்சுகள் உள்ளிட்டவை அடங்கிய 3 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

இளையராஜாவிடம் முன்னுரை கேட்டது ஏன்?
பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ப்ளூகிராப் நிறுவனம் எழுதிய இன்னொரு புத்தகம்தான் அம்பேத்கரும் மோடியும்!. இந்த நிறுவனம் இதுவரை மோடி குறித்து 4 புத்தகங்களை எழுதியிருந்தாலும் அதை எழுதியவர்கள் யார் என தெரியவில்லை. மோடி, அம்பேத்கர் போல இளையராஜாவும் மிகவும் கஷ்டப்பட்டு தனத வாழ்க்கையில் முன்னேறியுள்ளதாலேயே அவரிடம் முன்னுரை வாங்கியதாக அகிலேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications