74வது குடியரசுத் தினம்.. அக்னி வீரர்கள் முதல் பெண் BSF வீராங்கனைகள் வரை! விழாவில் ஏகப்பட்ட புதுமைகள்
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த அணி வகுப்பில் முதன் முறையாக பல புதிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல ராஜ பாதையில் பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆனால் இந்த முறை ராஜ பாதையில் இல்லாமல் கடமை பாதையில் அணிவகுப்பு நடைபெறுகிறது. டெல்லி ராஷ்டிரபதி பவனில் தொடங்கி இந்தியா கேட் வரை நீண்டுள்ள பாதை ஆங்கிலேயர் காலத்தில் 'ராஜபாதை' என்று அழைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி இந்த சாலையை 'கடமை பாதை' என்று பெயர் மாற்றினார்.
எனவே கடமை பாதையில் நடைபெறும் முதல் குடியரசுதின அணிவகுப்பு இதுதான். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு வீரர்கள் இந்த அணிவகுப்பில் ஈடுபடுவார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் கடந்த சுதந்திர தின அணிவகுப்பில் பயன்படுத்தப்பட்டாலும், குடியரசு தின அணிவகுப்பில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆயுதம்
வழக்கமாக இந்த அணிவகுப்பில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்து 25-பவுண்டர் ஃபீல்ட் கன் (Field Gun) இடம்பெற்றிருக்கும். ஆனால் முதல் முறையாக இதற்கு மாற்றாக 21-துப்பாக்கி சல்யூட் தேசி 105 மிமீ இந்திய ஃபீல்ட் கன் இடம்பெற்றிருக்கும். அதேபோல இந்த ஆண்டு அணிவகுப்பில் முதன் முறையாக 180 எகிப்து ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி பங்கேற்கிறார். மட்டுமல்லாது அக்னிபாத் திட்டத்தில் பணியில் சேர்ந்துள்ள அக்னி வீரர்களும் இந்த அணிவகுப்பில் முதன் முறையாக இடம்பெறுகின்றனர்.

பெண் வீரர்கள்
பாக்கிஸ்தானுடனான பாலைவன எல்லையைக் காக்கும் பெண் வீரர்கள் BSF ஒட்டகக் குழுவின் ஒரு பகுதியாக அணிவகுப்பில் பங்கேற்பார்கள். அதேபோல இந்திய கடற்படையின் டோர்னியர் 228 ரோந்து விமானத்தின் உயரதிகாரியாக உள்ள லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் இந்த ஆண்டு அணிவகுப்பில் 144 மாலுமிகள் கொண்ட கடற்படைக் குழுவை வழிநடத்துகிறார். இந்த அணிவகுப்பில் கடற்படையின் IL-38 கடல் உளவு விமானம் கடைசியாக பறக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படைக்கு சேவையாற்றிய இந்த விமானம் இந்த குடியரசு தின அணிவகுப்புடன் தனது பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

விமானங்கள்
IL-38 விமானம் தவிர 9 ரஃபேல் ஜெட் விமானங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என 44 வானூர்திகள் இதில் பங்கேற்கிறது. காலை 10.30 மணிக்கு விஜய் சௌக்கில் தொடங்கி செங்கோட்டை வரை அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரலாறு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்கின்றன. அதேபோல முன்னெப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் முதல் முறையாக ஒரு அட்டவணையை காட்சிப்படுத்துகிறது.

வழக்கமானவை
இது தவிர வழக்கமாக காட்சிப்படுத்தப்படும் நவீன ஏவுகணைகள், பீரங்கிகள், இதர போர் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்படும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இந்த அணிவகுப்பை பார்வையிடுவதற்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் அணி வகுப்பு நடைபெற உள்ள நிலையில் டெல்லி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications