எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை மீறி... வாக்காளர் அட்டை- ஆதார் அட்டை இணைப்பில் தேர்தல் ஆணையம் மும்முரம்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் திருத்த சட்டம் 2021 நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அண்மையில் விசரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தல் விடுத்தது. ஆதார் என்பது வசிப்பிட அடையாள அட்டை; அது குடியுரிமை சான்றிதழ் அல்ல. ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடாது என்பது காங்கிரஸ் நிலைப்பாடு.

திரிபுராவில் மும்முரம்
இதனிடையே வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மகாராஷ்டிரா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் இன்று முதல் தீவிரப்படுத்தி உள்ளன. இது தொடர்பாக திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி கிரன் கிட்டே கூறியதாவது: வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஆதார் அடையாள அட்டையை அதிகாரிகள் பெறுவர். வாக்காளர் அடையாள அட்டையுன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் அடியோடு ஒழிக்கப்படும்.

புதிய வாக்காளர் பட்டியல்
அதேநேரத்தில் வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் பெயருக்கு அருகில் ஆதார் எண் பகிரங்கப்படுத்தவும் மாட்டாது. வோட்டர் ஸ்லீப்பிலும் ஆதார் எண் இடம்பெறச் செய்ய மாட்டோம். அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்களைப் பெற்ற பின்னர் பிழைகள் இல்லாத புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கிரன் கிட்டே கூறினார்.

மகாராஷ்டிராவில் தீவிரம்
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிகளும் இதேபோல் நடவடிக்கையை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் அட்டை இணைப்பு பணி தொடங்கும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி ஶ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறியதாவது: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர் பெயர் வேறு தொகுதியில் பதிவாகி இருந்தால் கண்டுபிடிக்க முடியும். அல்லது ஒரே தொகுதியில் வேறு வாக்குச் சாவடியில் இருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இத்தகைய குறைகளைக் களையத்தான் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கிறோம். இவ்வாறு ஶ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறினார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications