டெல்லியின் பல எல்லைகள் மூடல்... திகிரி எல்லையில் தேசியக்கொடியுடன் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்!
டெல்லி: காசிப்பூர் பகுதியை போன்று திகிரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் கையில் தேசியக்கொடி விவசாய சங்க கொடிகளுடன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி உள்ளிட்ட முக்கிய எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன.
போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லியில் பதற்றம்
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி சந்திக்கும் பகுதியான காசிப்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து விட்டனர். இந்த காசிப்பூர் உத்தரபிரதேச எல்லையில் உள்ளதால் டெல்லியை போன்று இங்கும் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் உத்தரபிரதேச அரசு உறுதியாக உள்ளது.

ஆர்.எல்.டி தலைவர் ஆதரவு
பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் அங்கு வந்து விவசாயிகளுடன் முகாமிட்டு உள்ளார். அவர் போலீசாரிடம் சரணடைய தொடர்ந்து மறுத்து வருகிறார். அங்கு இருந்து பின்வாங்க மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி காசிப்பூர் எல்லைக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

தேசியக்கொடியுடன் போராட்டம்
இதனால் உ.பி.-டெல்லி காசிப்பூர் எல்லையில் பதற்றம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதேபோல் திகிரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் அங்கு கையில் தேசியக்கொடி விவசாய சங்க கொடிகளுடன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
|
எல்லைகள் மூடல்
இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் மூடப்பட்டன. அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications