வருங்கால வைப்பு நிதி... நிறுனங்களுக்கு செக் வைத்த நிதியமைச்சர்... செம குஷியில் ஊழியர்கள்
டெல்லி: வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை சில நிறுவனங்கள் சரியான நேரத்தில் டெபாசிட் செய்வதில்லை என்றும் இனி தாமதமாகத் தொகையை டெபாசிட் செய்யும் நிறுவனங்களுக்கு எவ்வித விலக்குகளும் அனுமதிக்கப்படாது என்றார்.
2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாகக் காகிதமில்லா பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சி எம்பிகள் விவசாய சட்டங்கள் தொடர்பாக கோஷமிட்டனர். இருப்பினும், தனது பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வசித்தார்.
தனது பட்ஜெட் உரையில் வருங்கால வைப்பு நிதி குறித்து நிர்மலா சீதாராமன், "வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், நாட்டிலுள்ள சில நிறுவனங்கள் அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையைச் சரியான நேரத்தில் டெபாசிட் செய்வதில்லை.
இதனால் நிறுவனம் ஏதேனும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டால் வருங்கால வைப்புத் தொகைக்கான வட்டி உள்ளிட்டவற்றைப் பெறுவதில் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படும். வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு சரியான நேரத்தில் அனுப்பப்படுவதை உறுதி செய்யும் வகையில், தாமதமாகத் தொகையை டெபாசிட் செய்யும் நிறுவனங்களுக்கு எவ்வித விலக்குகளும் அனுமதிக்கப்படாது" என்றார்.
வருங்கால வைப்பு நிதியில் சரியான நேரத்தில் நிறுவனங்கள் டெபாசிட் செய்வதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
இந்தியன் வங்கியின் மைக்ரோ கிரெடிட் கார்டு வழங்கும் விழா… மும்பையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications