2 வருடங்கள் கழித்து.. இந்தியா-வங்கதேசம் இடையே தொடங்கும் ரயில் சேவை! எத்தனை ரயில் தெரியுமா?
டெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையே மே 29ல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக 2020ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்கதேசம். பாகிஸ்தான், இலங்கையை ஒப்பிடும்போது இந்தியா-வங்கதேசம் இடையே காலம் காலமாக நல்ல உறவு உள்ளது.
மேலும் இருநாடுகளும் நல்ல புரிதலுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய வங்கதேச பிரதமர் செய்க் ஹசீனாவும் இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார்.

ரயில் சேவை
இந்தியா-வங்கதேசம் இடையே தரைவழி பயணமாக ரயில்கள் இயங்கி வந்தன. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு ரயில்கள் சென்று வந்தன. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்று வந்தனர். மேலும் இருநாடுகளையும் இணைக்கும் பாலமாக இந்த ரயில்கள் இருந்தன.

கொரோனாவால் நிறுத்தம்
இந்நிலையில் தான் 2020 துவக்கத்தில் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்தியா-வங்கதேசம் இடையே நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மே 29ல் மீண்டும் துவக்கம்
இந்நிலையில் இந்தியா-வங்கதேசம் இடையே மே 29ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு கிளம்பியுள்ளது. அதன்படி வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து டாக்கா-கொல்கத்தா இடையே இயங்கும் வகையில் மைத்ரீ எனும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்நாட்டு ரயில்வே சார்பிலும், கொல்கத்தா-குல்னா நகர் இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் நமது ரயில்வே சார்பிலும் இயங்க உள்ளது.

என்ஜேபி-டாக்கா மிதாலி எக்ஸ்பிரஸ்
மேலும் என்ஜேபி-டாக்கா மிதாலி எக்ஸ்பிரஸ் சேவைகள் ஜூன் 1ல் ரயில் பவனில் இருந்து இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் ரயில்வே அமைச்சர்கள் மூலம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய முழு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications