கொரோனா பயங்கர ருத்ரதாண்டவம்- ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 3, 827, டெல்லியில் 3,137 பேருக்கு பாதிப்பு
டெல்லி: நாட்டில் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 3,827 பேருக்கும் டெல்லியில் 3,137 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் கொடூரமாக இருந்து வருகிறது. உலக நாடுகள் அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் 3827 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,24,331 ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் மகாராஷ்டிராவில் மொத்தம் 142 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,893 ஆக உயர்ந்துவிட்டது.
மும்பையில் மட்டும் 1,269 பேருக்கு வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியானது. மும்பையில் வெள்ளிக்கிழமையன்று 114 பேர் உயிரிழந்தனர். மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,068 ஆக இருக்கிறது.
மகாராஷ்டிராவைப் போல டெல்லியிலும் கொரோனா தாக்குதல் உக்கிரமாக இருக்கிறது. ஒரேநாளில் 3,137 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,116 ஆக உயர்ந்தது.
டெல்லியில் ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2035 ஆகவும் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications