எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.. மீண்டும் இதே வரிசையில் தான் இருப்பீர்கள்! பிரதமர் மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிதலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பார்கள் என்பது எனக்கு தெளிவாக தெரிகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத்தலைவர் உரை வெளிப்படுத்தியுள்ளது. 4 தூண்கள் பற்றி குடியரசுத்தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியின் தற்போதைய நிலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.
நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். காங்கிரசின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. கூட்டணி கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. காங்கிரஸின் செயல்பாடுகளால் நாட்டிற்கே இழப்பு தான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications