கொடுமையை பாருங்க.. இந்தியாவில் போராடுவது, கருத்து சொல்வது சட்ட விரோதமாகிவிட்டது- ராகுல் காந்தி கோபம்
டெல்லி: இந்தியாவில் போராட்டம் செய்வது, கருத்து கூறுவது அனைத்தும் சட்டவிரோதம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாடம் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

கறுப்பு சட்டை போராட்டம்
இதனைத்தொடர்ந்து நேற்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாஜக அரசின் தவறுகளை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் கொள்கைகள், பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் கறுப்பு சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சி எம்பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் பேரணி
இதன்பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் சசி தரூர், கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் விஜய் சோக் பகுதியில் பேரணியாக சென்ற போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

பிரியங்கா கைது
இதேபோல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க ஏராளமான தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பிரியங்கா காந்தி, தடுப்புகளில் ஏறி குதித்து ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இவரை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த போது, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். பின்னர் அவரை குண்டுகட்டையாக தூக்கிய போலீசார், தரையில் இழுத்து சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

ராகுல் காந்தி விமர்சனம்
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி-க்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், இந்தியாவில் போராட்டம் செய்வது, கருத்து கூறுவது என எல்லாம் சட்டவிரோதம். ஆனால், பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று விமர்சித்தார்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications