ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி : ஆகஸ்ட் 14ம் தேதி இனி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இந்தியாவில் இருந்து பிரிந்தது. ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது,

ஆனால் மத வாரியாக நாடு பிரிந்த அந்த சமயத்தில் மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தது. வங்காளம், சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் என அன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்கள் அப்போது வெடித்தன. இந்த கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் உறவுகளை இழந்தனர். உடமைகளை இழந்தனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பலர் அடித்துவிரட்டப்பட்டனர்.
ஒரு பக்கம் கொண்டாட்டங்கள் இருந்த நிலையில் மறு பக்கம் பிரிவினை கலவரம் மக்களிடையே ஆறாத துயரத்தை ஏற்படுத்தியது. வட மாநிலங்களில் அந்த கலவரத்தின் தாக்கம் இன்றவும் உள்ளது. இந்த கலவரத்தில் சிதறிய மக்கள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள்.
இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி இனி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரிவினையின் பொழுது உயிர் தியாகம் செய்த இந்தியர்களின் தியாகங்களை போற்றுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications