ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : ஆகஸ்ட் 14ம் தேதி இனி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இந்தியாவில் இருந்து பிரிந்தது. ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது,

India declares 14 august as partition horrors remembrance day

ஆனால் மத வாரியாக நாடு பிரிந்த அந்த சமயத்தில் மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தது. வங்காளம், சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான் என அன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்கள் அப்போது வெடித்தன. இந்த கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் உறவுகளை இழந்தனர். உடமைகளை இழந்தனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பலர் அடித்துவிரட்டப்பட்டனர்.

ஒரு பக்கம் கொண்டாட்டங்கள் இருந்த நிலையில் மறு பக்கம் பிரிவினை கலவரம் மக்களிடையே ஆறாத துயரத்தை ஏற்படுத்தியது. வட மாநிலங்களில் அந்த கலவரத்தின் தாக்கம் இன்றவும் உள்ளது. இந்த கலவரத்தில் சிதறிய மக்கள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி இனி பிரிவினை பயங்கரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரிவினையின் பொழுது உயிர் தியாகம் செய்த இந்தியர்களின் தியாகங்களை போற்றுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+