ரூ.1.93 லட்சம் கோடிக்கு வெளிநாட்டு ஆயுதங்கள் இறக்குமதி! மேக் இன் இந்தியா என்னாச்சு? அரசின் விளக்கம்
2018ம் ஆண்டு முதல் தற்போது வரை இறக்குமதி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களில் அதிகபட்சமாக 2020-21ம் ஆண்டு மட்டும் ரூ.43,916 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியா வெளிநாடுகளிலிருந்து சுமார் ரூ.1.93 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை வாங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தற்போது வெளிநாட்டிலிருந்து ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் 'மேக் இன் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் உள்நாட்டுக்கு தேவையானவை மட்டுமல்லாது வெளிநாட்டுக்கு தேவையானவற்றையும் நம்மால் உற்பத்தி செய்து கொடுக்க முடியும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017-18ம் ஆண்டு முதல் இந்தியா எந்த அளவுக்கு வெளிநாட்டு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்திருக்கிறது என்று மக்களவையில் எதிர்க்கட்சியால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் அஜய் பட், மேற்குறிப்பிட்ட விவரங்களை கூறியுள்ளார்.

இறக்குமதி
அவர் கூறியுள்ள பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "கடந்த 2017-18ம் ஆண்டு முதல் தற்போது வரை ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய சுமார் 264 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 88 ஒப்பந்தங்கள் வெளிநாட்டினுடையதாகும். அந்த வகையில், 2017-18ம் ஆண்டில் ரூ.30,677 கோடிக்கும், 2018-2019ம் ஆண்டு ரூ.38,116 கோடிக்கும், 2019-20ம் ஆண்டு ரூ.40,330 கோடிக்கும், 2020-21ம் ஆண்டு ரூ.43,916 கோடிக்கும், 2021-2022ம் ஆண்டு ரூ.40,840 கோடிக்கும் வெளிநாட்டிலிருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ரஃபேல்
இந்த பட்டியலில் 2016ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானம் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. இவ்வளவு அதிகமாக ராணுவ தளவாடங்கள் வாங்கியிருந்தாலும் கூட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆத்மநிர்பார் பாரத் மற்றும், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதால் இறக்குமதி குறைந்திருக்கிறது. தற்போது கூட ரூ.73,943 கோடி மதிப்பில் 55 'மிஷன் மோட்' திட்டங்களில் டிஆர்டிஓ (DRDO) செயல்பட்டு வருகிறது.

ஆயுதங்கள்
இந்த திட்டத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல்கள், போர் அறைகள், டார்பிடோக்கள், போர் விமானங்கள், கப்பல் ஏவுகணைகள், ட்ரோன்கள், தாக்குதல் துப்பாக்கிகள், போர்க்கப்பல்கள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், பீரங்கிகள், போர் வாகனங்கள், தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், விமானநிலைய எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன" என கூறியுள்ளார். இந்த உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது.

பட்ஜெட்
கடந்த ஆண்டு இத்துறைக்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதன்முறையாக அக்னிபாத் திட்டத்திற்கு ரூ.4,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்திய விமான படைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.0.57 லட்சம் கோடி(3.6% அதிகரிப்பு) உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு 0.37 லட்சம் கோடியும்(15% உயர்வு), கடற்படைக்கு 0.52 லட்சம் கோடியும், ஓய்வூதியங்களுக்காக 16 சதவிகிதமும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்குதான் அதிக அளவு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications