இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா... விழிப்புணர்வு அவசியம் மக்களே

கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 80 நாட்களில் முதல் முறையாக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,870 இலிருந்து 11,058 ஆக அதிகரித்தன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நேற்று புதிதாக 1,007 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 80 நாட்களில் முதல் முறையாக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,870 இலிருந்து 11,058 ஆக அதிகரித்தன.

Recommended Video

    India logs new Covid cases! Active cases see slight rise | OneIndia Tamil

    இந்தியாவில் கொரோனா 3வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கடந்த 4ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குள் வந்தது. அதன்பிறகு சற்று ஏறுமுகமாக இருந்தது. பின்னர் குறைந்து புதன்கிழமை ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 796 ஆக பதிவாகி இருந்தது. நேற்று புதிதாக 1,088 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

    India rise in active COVID-19 first time in 80 days

    இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 88 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,38,016 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் நேற்றைய தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 80 நாட்களில் முதல் முறையாக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,870 இலிருந்து 11,058 ஆக அதிகரித்தன.

    நாட்டில் தினசரி 1,007 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால், 24 மணி நேரத்தில் புதிய தொற்றுகள் 1,000 க்கு மேல் இருப்பது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,39,023 ஆக உள்ளது.

    புதிய நோய் தொற்றுகளின் அதிகரிப்பு மற்றும் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில்-டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானாவில் சோதனை நேர்மறை விகிதங்களுக்கு மத்தியில் வருகிறது. இந்த மாநிலங்களில் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களும் கோவிட்-19 அறிகுறிகளுடன் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், பெரும்பாலான நோயாளிகள் காய்ச்சல், சளி மற்றும் இருமலுடன் லேசான அறிகுறிகளுடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    நேற்றைய தினம் தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,736 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 1,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,05,410 ஆக உயர்ந்துள்ளது.
    இந்தியாவில் இதுவரை 1,86,07,06,499 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. திங்கள் கிழமை 137 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென தொற்று பாதிப்பு 325 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.5 சதவிகிதத்தில் இருந்து 2.39 சதவிகிதமாக ஒரே வாரத்தில் உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்தாலும் ஆறுதல் தரும் வகையில் உயிரிழப்பு எதுவும் இல்லை.

    கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்களின் எண்ணிக்கை விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது இதனால், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருவதால் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் 20 ஆம் தேதி கூட உள்ளது. கொரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+