கொரோனா தடுப்பூசியில் இந்தியா புதிய சாதனை... நாடு முழுவதும் இதுவரை 1 கோடி பேருக்கு தடுப்பூசி!
டெல்லி: இந்தியாவில் தற்போது வரை 1,01,88,007 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 10,896 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கம்
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் நின்றபாடில்லை. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.

சில மாநிலங்களில் அதிகம்
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அடங்க மறுக்கிறது. அதுவும் குறிப்பாக கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷுல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதலில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்
இந்தியாவில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களே பெருமளவில் தயக்கம் காட்டினார்கள். தடுப்பூசிகள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்று கருதியும், கோவேக்சின் மீது நம்பிக்கை இல்லாமலும் பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வந்தது.

1 கோடிக்கு தடுப்பூசி
இந்த நிலையில் இந்தியா ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1,01,88,007 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 10,896 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications