புத்தாண்டை "சிறப்பா" கொண்டாடிய இந்தியர்கள்.. பிரியாணிய விடுங்க, ஆணுறை விற்பனையும் உச்சம்! இதோ லிஸ்ட்
டெல்லி: புத்தாண்டுக்கு முந்தைய நாளில் காண்டம் விற்பனை படுவேகம் எடுத்ததாகவும் அன்றைய தினம் மட்டும் டுரெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையானதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ட்விட்டரில் நேற்று பதிவிட்டு இருந்தது. இதற்கு மிகவும் சுவராசியமான முறையில் டுரெக்ஸ் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் அதிக விற்பனை செய்யப்பட்ட உணவு வகைகள் குறித்த பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
அதில் சந்தேகமே இல்லாமல் அனைவரும் நினைப்பதைப் போலவே பிரியாணியே முதலிடம் பிடித்து இருந்தது. 3.5 லட்சம் பிரியாணிகள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10.30க்குள் விற்பனையாகி இருந்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

டொமினோஸ் பிட்சா
அதேபோல் ஐதராபாத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் 15 ஆயிரம் ஆர்டர்கள் வந்து குவிந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்து இருந்தது. அதேபோல புத்தாண்டுக்கு முந்தைய நாளில் டொமினோஸ் பிட்சா விற்பனையும் களை கட்டியிருந்தது. 61,287 டொமினோஸ் பிட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருந்ததாகவும் சிப்ஸ் பக்கெட்டுகள் 1.76 லட்சமும் கிச்சடி உணவை 12,344 பேரும் ஆர்டர் செய்து இருந்ததாக ஸ்விக்கி கூறியிருந்தது.

காண்டம் விற்பனை அதிகம்
அதேபோல், எந்த பிரியாணி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு இருக்கும் என்று கருத்துக்கணிப்பையும் ஸ்விக்கி நடத்தியது. இதில் சுமார் 75 சதவிகிதம் ஐதராபாத் பிரியாணியே என்று கூறியிருந்தனர். இதைத்தவிர வீட்டுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் விற்பனையான பொருட்கள் குறித்தும் ஸ்விக்கி நிறுவனம் பகிர்ந்து இருந்தது. அதில் சுவாரசியம் அளிக்கும் வகையில் காண்டம் விற்பனைகள் அதிகமாக இருந்தது தெரியவந்தது.

2,757 பாக்கெட்டுகள்
டுரெக்ஸ் என்ற பிரபலமான நிறுவனத்தின் காண்டம்கள் மட்டும் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையாகி இருந்ததாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தெரிவித்து இருந்தது. ஸிவிக்கி பதிவை போட்டதுமே நெட்டிசன்கள் பலரும் தங்கள் வழக்கமான பாணியில் கருத்துக்களை பதிவிடத் தொடங்கிருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு காண்டம் விற்பனை அதிகமாக இருந்ததாக ஸ்விக்கி வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் டுரெக்ஸ் நிறுவனம் ட்விட் ஒன்றை போட்டுள்ளது.

புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்
அந்த ட்விட்டில் "அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டெலிவரி செய்ததற்கு நன்றி. குறைந்தபட்சம் 2,757-பேராவது புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள் என்று நம்புகிறோம். மறுநாள் காலையில் ஒன்றாக அவர்கள் காஃபியை ஆர்டர் செய்து இருப்பார்கள் எனவும் நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளது. டுரெக்ஸ் நிறுவனத்தின் இந்த ட்விட் பதிவு நெட்டிசன்களுக்கு வெறும் வாயில் அவல் கிடைத்தது போல ஆகிவிட்டது. இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் தங்கள் கருத்தை வாரிக்குவித்து வருகின்றனர்.

ஒருபாக்கெட்டிற்குள் 2 காண்டம்கள்
நெட்டிசன்கள் பலரும் ஒருபாக்கெட்டிற்குள் இரண்டு காண்டம்கள் இருக்கும் என்று குறிப்பிடும் வகையில் 5514 பேர் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல புத்தாண்டுக்கு முந்தைய நாளில் டொமினோஸ் பிட்சா விற்பனையும் களை கட்டியுள்ளது. 61,287 டொமினோஸ் பிட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது. சிப்ஸ் பக்கெட்டுகள் 1.76 லட்சமும் கிச்சடி உணவை 12,344 பேரும் ஆர்டர் செய்து இருந்ததாக ஸ்விக்கி கூறியிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications