ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் பீட்டா வலியுறுத்தல்!
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்துக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கில் அனைத்து தரப்பும் அறிக்கைகள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 23 -க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவதல் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும். ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை நடத்த மத்திய அரசு தடை விதித்தது.

மத்திய அரசின் தடைக்கு எதிராக தமிழகத்தில் தன்னெழுச்சியான கிளர்ச்சிந நடைபெற்றது. இது ஜல்லிக்கட்டுப் புரட்சி, மெரினா புரட்சி என அழைக்கப்படுகிறது. உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாட்கள் போலீசாரால் மிக மோசமாக ஒடுக்கப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
இம்மனுக்கள் மீது நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன்பு விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதார், எதிர் மனுதாரர்கள் என அனைத்து தரப்பும் 3 வாரங்களுக்குள் இவ்வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications