சொந்தமாக விமானமே கிடையாது.. அப்புறம் எதுக்கு அதற்கு தனி துறை? கனிமொழி சோமு சரமாரி கேள்வி
டெல்லி: புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி சோமு, சொந்தமாக விமானமே இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு என ஏர் இந்தியா விமானம் சொந்தமாக இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த விமான போக்குவரத்து துறையை முற்றிலுமாக தனியார்மயப்படுத்திவிட்டது. எனவே, ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கிவிட்டது. கடந்த காலங்களில் உக்ரைன் போர் வெடித்தபோது அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு வர ஏர் இந்தியாவைதான், மத்திய அரசு பயன்படுத்தியது. ஆனால் இப்போது இதுபோன்ற ஒரு அவசர நிலை ஏற்பட்டால் தனியார் விமானங்களை நாட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. இப்படி இருக்கையில்தான் புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை விமர்சித்து பேசிய கனிமொழி சோமு, மத்திய அரசுக்கு காட்டமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, “இந்திய அரசுக்கு என சொந்தமாக விமானங்கள் கிடையாது. நாம் விமானங்களையும் உருவாக்குவதில்லை. ஆனால் விமான தயாரிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று புதிய விமான போக்குவரத்து மசோதா 2024-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது முரணானதாக இருக்கிறது. மத்திய அரசு முன்வைத்த மேக் இன் இந்தியா, ஸ்டேண்ட்-அப் இந்தியா என்கிற திட்டங்களை கொஞ்சம் திரும்பி பாருங்கள். இரண்டுமே நகைப்புக்குரியதாக மாறியிருக்கிறது. இவை தற்போது வெற்று முழக்கங்களாக மட்டுமே இருக்கிறது.
விமான விபத்து குறித்து ஆய்வு, போதுமான பாதுகாப்பு குறித்து புதிய சட்டங்கள் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை வழங்கும் விதமாக இந்த மசோதா இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், ஏற்கெனவே இதுபோன்ற மசோதாக்கள் இயற்றப்பட்டிருக்கிறருக்கின்றன. எனவே அரை மாவையே அரைக்க வேண்டாம்.
இங்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது தெரியுமா? விமான போக்கவரத்தை முற்றிலுமாக தனியார் மயப்படுத்தியதன் விளைவாக அவசர காலங்களில் தனியார் விமான போக்குவரத்தை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு நம்மை அரசு தள்ளியிருக்கிறது. விமான நிலைய கட்டமைப்புகளை எடுத்துக்கொண்டால் அங்கு நடப்பது பகல் கொள்ளையாக இருக்கிறது. வெளியில் ரூ.20க்கு குடிநீர் விற்கப்பட்டால், விமான நிலையத்தில் ரூ.50க்கு விற்கப்படுகிறது” என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை கனிமொழி சோமு முன்வைத்திருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications