இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றும் சீன கப்பல்கள்.. உன்னிப்பாக கண்காணிக்கிறோம்- இந்திய கடற்படை
டெல்லி: 2047- ஆம் ஆண்டுக்குள் கடற்படையில் இந்தியா தற்சார்பு அடையும் என்றும் இந்திய பெருங்கடல் எல்லைப்பகுதியில் சீன கப்பல்கள் சுற்றுவதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உலகின் 3-வது பெரிய கடலாக இந்திய பெருங்கடல் உள்ளது.
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் விக்டோரியா மற்றும் அமிரண்டோ தீவுகள் உள்ளன.

இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள்
வடக்குப்பகுதியில் மாலத்தீவு, இலங்கை போன்ற தீவு நாடுகளும் இருக்கின்றன. உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் தான் வசித்து வருகின்றனர். உலக அளவில் அதிகமான வளர்ந்து வரும் நாடுகளும் இந்திய பெருங்கடல் பகுதியில்தான் அமைந்துள்ளன. வர்த்தகத்தை பொறுத்தவரை 80 சதவீதம் வர்த்த போக்குவரத்து இந்திய பெருங்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெற்று வருகிறது.

மிகவும் விழிப்புடன்..
உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வரும் சீனா, இந்திய பெருங்கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளவும் சீனா முனைப்பு காட்டி வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிராக அமையும் என்பதால் இந்தியாவும் இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் உள்ளது.

உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த இந்திய கடற்படை தளபதி, இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறினார். இது தொடர்பாக இந்திய கடற்படை தளபதி ஆர்.ஹரிகுமார் பேசியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் பல சீன கப்பல்கள் இயங்கி வருகின்றன. 4-6 சீன கடற்படை கப்பல்கள் மற்றும் சில ஆய்வு கப்பல்கள் குறித்து நாங்கள் அறிவோம்.

இந்தியா தற்சார்பு அடையும்
இந்திய பெருங்கடல் பகுதியில் பெருமளவு சீன மீன்பிடி கப்பல்களும் இயக்கப்படுகின்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்திய பெருங்கடல் பகுதி முக்கியமான பகுதி என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இந்த கடல் பகுதியில் பெருமளவு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளுக்காக பிற நாடுகளை தொடர்ந்து சார்ந்து இருக்க முடியாது. 2047- ஆம் ஆண்டுக்குள் கடற்படையில் இந்தியா தற்சார்பு அடையும்" என்றார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications