மகாத்மா காந்தியின் ஆன்மா கவலைப்பட்டிருக்கும்.. சோனியா காந்தியின் டைமிங் தாக்கு!
டெல்லி: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்து மகாத்மா காந்தியின் ஆன்மா கவலை அடைந்து இருக்கும், நொந்து போயிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, ராஜ்காட் பகுதியில், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சோனியா காந்தி சிறிய உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியா மற்றும் காந்தி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது. ஆனால் சிலர், இந்தியா என்றால் ஆர்எஸ்எஸ் என்று மாற்றுவதற்கு நினைக்கிறார்கள். தாங்கள் தான் ரொம்பவே உயர்வானவர்கள் என்று நினைத்துக் கொள்வோர், மகாத்மா காந்தியின் தியாகங்களை நினைத்து பார்க்கவேண்டும்.
தவறுகளால் அரசியல் நடத்தி வருவோருக்கு, மகாத்மா காந்தியின் அகிம்சை என்ற கொள்கை புரிய போவது கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். காங்கிரஸ் மட்டுமே மகாத்மா காந்தியின் பாதையை பின்பற்றி கொண்டிருக்கிறது.
வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், விவசாயிகளுக்கும், கல்வி, வேலை வாய்ப்பு அளித்தது காங்கிரஸ் மட்டுமே. கடந்த சில வருடங்களாக நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்து மகாத்மா காந்தியின் ஆன்மா கண்டிப்பாக கவலைப்பட்டிருக்கும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளில், எனது மரியாதையை செலுத்துகிறேன். தனது சொல், செயல் மூலமாக அனைத்து உயிர்களுக்கும், அன்பையும், அகிம்சையையும் கற்றுக்கொடுத்தவர் மகாத்மா காந்தி. வெறுப்பு, வன்மம் போன்றவற்றை, அவரது கொள்கைகளால்தான் ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications