Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்.. போராட்ட களத்திலேயே இன்னுயிரை மாய்த்த மாதங்கினி ஹஸ்ரா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவரும், இறுதியில் போராட்ட களத்திலேயே தனது இன்னுயிரை மாய்த்த மாதங்கினியின் வீர வரலாற்றை இதில் பார்க்கலாம்.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த பொன்னான தருணத்தில் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டு அதிகம் கொண்டாடப்படாத சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருப்பது தலைவர் மாதங்கினி ஹஸ்ரா.

 சுதந்திர போராட்டத்தில்

சுதந்திர போராட்டத்தில்

காந்திபுரி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட மாதங்கினி ஹஸ்ரா 1869 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹோக்லா கிராமத்தில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தார். வறுமையில் அவரது குடும்பம் வாடியது. இதனால், மாதங்கினி ஹஸ்ராவால் முறையான கல்வியை பெற முடியவில்லை. 12-வயதில் அவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டது. 18-வயதில் கணவர் இறந்து விட்டதால், இல்லற வாழ்க்கையை தொடங்கும் முன்பே விதவையானார். 1905 ஆம் ஆண்டு முதல் காந்தியவாதியாக சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார்.

 உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்

உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்

1932 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டார். எனினும் உடனடியாக ஆங்கிலேயர்கள் அவரை விடுவித்தனர். எனினும் மீண்டும் ஆங்கிலேயர்கள் மாதாங்கினி ஹஸ்ராவை கைது செய்தனர். பஹரம்பூர் சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாக செயலாற்றினார். தானே நெய்த கதர் ஆடைகளையே உடுத்துவதை வழக்கமாக்கி கொண்டார். 1933 ஆம் ஆண்டு செராம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின் போது போலீஸ் நடத்திய தடியடியில் காயமடைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தினார்.

 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு

இப்படி மாதங்கினி ஹஸ்ரா வாழ்க்கையின் பெரும் பகுதி போராட்டக்களத்திலேயே கழிந்தது. ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி, சிறை தண்டனை, தாக்குதல் என பல இன்னல்களை, காயங்களை, துயரங்களை தாங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரம் அடைந்த 1942 ஆம் ஆண்டு காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது. அவரது கைதுக்கு எதிராக நாடு முழுவதும் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடைபெற்றது. 71 வயதான மதாங்கினி ஹஸ்ரா இந்த போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்தார்.

 காந்தியை விடுதலை செய்யக்கோரி

காந்தியை விடுதலை செய்யக்கோரி

1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி மாதங்கினி ஹஸ்ரா டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில், ஆயிரக்கணக்கானோருடன் திரண்டு வந்த மாதங்கினி ஹஸ்ரா, காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேய போலீசார் மாதங்கினி ஹஸ்ராவையும் போராட்டகாரர்களையும் கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் மாதங்கினி ஹஸ்ரா குண்டு பாய்ந்து உயிரிழந்தார். போராட்ட களத்திலேயே தனது இன்னுயிரை இழந்த மாதங்கினி ஹஸ்ராவின் தியாககும் போற்றப்பட வேண்டியதே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+