டீல் ஓகே.. காங்கிரஸில் இணைகிறார் பிகே? இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல்! முக்கிய தலைகள் வைத்த ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவை மதிப்பீடு செய்ய சோனியா காந்தி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, அவர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகி, காங்கிரசில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Congress கட்சியில் இணையும் Prashant Kishore? | Oneindia Tamil

    குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள போதிலும் கட்சிகள் அதனை நோக்கியே தங்கள் திட்டத்தை வகுத்து வருகின்றன.

    பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

    பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

    மூன்றாவது முறையாக ஹாட்ரிக் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டி தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியம் என்பதால் அது குறித்த வியூகங்களை வகுப்பது பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

    சோனியா காந்தி

    சோனியா காந்தி

    சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறுபிரச்சினைகள் விவரித்ததோடு, 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார். மேலும் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவரத் தயார் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

    ஆய்வு குழு அமைப்பு

    ஆய்வு குழு அமைப்பு

    இதுகுறித்து ஆராய அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சுமார் 9 திட்டங்களையும் பிரசாந்த் கிசோர் முன் வைத்த நிலையில், இந்த திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது குறித்து சோனியா காந்தி அமைத்த குழு ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியா காந்தி முடிவெடுப்பார்.

    கிட்டத்தட்ட உறுதி

    கிட்டத்தட்ட உறுதி

    இந்நிலையில் தான் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவை மதிப்பீடு செய்ய சோனியா காந்தி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, அவர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகி, காங்கிரசில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் கிஷோரின் பரிந்துரைகளை செயல்படுத்தப்படலாம் என்று கருதுகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் ஆய்வு குழுவுடன் ஆலோசனைகளை முடித்து, கிஷோருடன் இறுதி சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+