100 நாட்களில் 46 பொதுத்துறை நிறுவனங்கள் 'குளோஸ்' அல்லது தனியாருக்கு தாரைவார்ப்பு!
Recommended Video
டெல்லி: 100 நாட்களில் 46 பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அல்லது தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற போது 60 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் ஆணையம் நிதி ஆயோக். இதுவே நாட்டுக்கான செயல் திட்டங்களை வகுத்து பிரதமருக்கு தரக் கூடியது. இதன் துணைத் தலைவர் ராஜீவ் குமார், புதிய சீர்திருத்தங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார்.
பிரதமர் மோடி பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அடுத்த 100 நாட்களில் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகளை ராஜீவ்குமார் விவரித்துள்ளார். அவரது பெட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியின் 2-வது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்களில் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம், தனியார் மயமாக்கல், தொழிற்வளர்ச்சிக்காக நில வங்கிகள் அமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகளால் அன்னிய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைவர். புதிய தொழிலாளர் நலச் சட்டமான ஜூலையில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
மொத்தம் 44 தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சட்டங்கள் இருக்கும். நில வங்கிகள் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் தொழில்நிறுவனங்கள் அமைக்க நிலம் எளிதாக கிடைக்கும்.
46 பொதுத்துறை நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்படும். அவை மூடப்படும் அல்லது தனியாருக்கு தாரை வார்க்கப்படும். அதேபோல் ஏர் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான தடைகளும் நீக்கப்படும்.
இவ்வாறு ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
வேலை இல்லா திண்டாட்டம்
மோடியின் கடந்த ஆட்சியில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் சிறு குறு தொழில்கள் ஒழித்து கட்டப்பட்டன. பல கோடி பேர் வேலை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.
தற்போது 46 பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடுவது அல்லது தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற முடிவால் வேலை இழப்ப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இது சமூகத்தில் பெரும் பதற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications